கோவிட்டிற்கு இலக்காகி இரு வாரங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற இளம் வைத்தியர் பலி
ராகமவில் உள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரொருவர் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த வைத்தியர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
குறித்த மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவில் கடமையாற்றி வந்த 34 வயதுடைய மொஹமட் ஜனன் என்ற வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வைத்தியர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சுமார் இரு வாரங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 27 வைத்தியர்கள், 105 செவிலியர்கள் உள்ளடங்களாக 265 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வெளியான கோவிட் பரிசோதனை முடிவுகளின் படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 9 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
