இராகலை உயர் பாடசாலை மாணவி வரலாற்று சாதனை!
2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தன.
இதன்படி, வரலாற்றில் முதல் முறையாக இராகலை உயர் பாடசாலையின் வர்த்தகப் பிரிவு மாணவி மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
செல்வராஜ் நிசோனி ஜெமிமால் என்ற மாணவி மாவட்ட ரீதியில் மூன்று பாடங்களிலும் மூன்று ஏ சித்திகளைப் பெற்று முதலாமிடத்தை பெற்றுள்ளார்.
இதேவேளை, வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய உயிரியல் விஞ்ஞான பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவன் மஹரதன் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.