ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்துவது இன முரண்பாட்டிற்கு வழிவகுக்கும்: இராதாகிருஷ்ணன்
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரொருவரை நிறுத்துவது இன முரண்பாட்டிற்கு வழிவகுக்குமென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இன்று (10.04.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழர்
அவர் தெரிவிக்கையில்,
“ ஜனாதிபதி தேர்தலில் தமிழர் ஒருவரை வேட்பாளராக நிறுத்தினால் அவர் வெற்றி பெறுவாரா இல்லையா என்பது ஒரு புறம் இருக்க நாட்டு மக்களிடையே இன முரண்பாடு ஏற்படும்.
எனவே ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஒருவருக்கு
ஆதரவளிக்க வேண்டும்.
அதே நேரத்தில் சிறுபான்மை மக்களும் வாக்குகளை சிதறடிக்காமல் தமக்கு பிடித்தமான ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
யாழில் இளம் தாயின் மரணத்துடன் தொடர்புடையவர் என கூறப்படும் நபர் சாணக்கியனின் பயிற்சி முகாமில்! வெடித்தது புதிய சர்ச்சை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |