நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கிகளை வழங்கும் நடவடிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்வி
இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது பதவிகளை விட்டு விலகிய பின்னரும் பயன்படுத்துவதற்காக இரண்டு ரிப்பீட்டர் ரக துப்பாக்கிகளை வழங்கும் பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கை, கேள்விகளை எழுப்பியுள்ளது
இந்த ஆயுதங்களை வேறு யாராலும் மாற்றவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது என்ற சிக்கலான நிபந்தனை காரணமாக, இந்த ஆயுதங்களின் விவகாரம் என்ன நோக்கத்திற்கு உதவும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏழு விண்ணப்பங்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்கனவே கைத்துப்பாக்கிகள் மற்றும் ரிவோல்வர்களை வைத்திருக்கும் உரிமை உண்டு.
இதற்கு மேலதிகமாகவே ரிப்பீட்டர் ரக துப்பாக்கிகள் வழங்கப்படுகின்றன.

இந்தநிலையில் துப்பாக்கிகளின் கொள்வனவுக்காக இதுவரை ஏழு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தெரிவித்துள்ளார்.
தானியங்கி ஆயுதங்கள்
இதேவேளை இந்த நடவடிக்கை குறித்து முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தமது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த ஆயுதங்களின் பயன்பாடு குறித்த முரண்பாடான சூழ்நிலையை ஏற்படுத்தும். அத்துடன் இந்த ஆயுதங்கள் தவறான கைகளுக்குச் செல்லக்கூடும் என்ற அச்சம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே, பிரிவினைவாதப் போரின் போது, பாதாள உலகத்திற்கு தானியங்கி ஆயுதங்கள் கிடைத்தபோது, அந்த ஆயுதங்களை மீட்பது முடியாத காரியமாக மாறியிருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது Cineulagam
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri