உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: முதல் உளவு தகவலை வழங்கியவர் குறித்து எழுப்பப்பட்ட கேள்வி

Sri Lanka Easter Attack Sri Lanka Crime Branch Criminal Investigation Department
By Sivaa Mayuri Jul 04, 2024 07:12 AM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நீதிக்காக வாதிடும் செயற்பாட்டாளர் ஒருவர், 2019 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் பணி புரிந்த ஒருவரே, இந்த தாக்குதல்கள் தொடர்பாக இலங்கைக்கு வழங்கப்பட்ட முதல் தகவலின் ஆதாரமாக இருந்ததாகக் கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி, அப்போதைய அரச புலனாய்வுப் பணிப்பாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜயவர்தன, வெடிகுண்டுத் தாக்குதலுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்தியாவிடம் இருந்து முக்கியமான உளவுத்துறையைப் பெற்றதாக, செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க என்ற செயற்பாட்டாளர் கூறியுள்ளார்.

தொழிற்சங்க நடவடிக்கையில் குதித்த சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள்!

தொழிற்சங்க நடவடிக்கையில் குதித்த சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள்!

விமானப்படைத் தலைவர்கள்

ஐந்து ஆண்டுகளாக உள்ளூர் மற்றும் சர்வதேச புலனாய்வாளர்களின் இடைவிடாத முயற்சிகள் இருந்தபோதிலும், இந்த குறிப்பிட்ட தகவலின் ஆதாரம் அடையாளம் காணப்படவில்லை.

question-first-person-intelligence-easter-attack

இந்தநிலையில்   ஷேஹான் மாலக்க  உளவுத்துறை ஆதாரத்தின் அடையாளத்தை வெளியிட்டுள்ளதாக ஊடகம் ஒன்று கூறியுள்ளது.

இலங்கையில் செயற்படும் இந்திய புலனாய்வு அமைப்பான RAW உடன் இணைக்கப்பட்ட இந்திய உயர் ஸ்தானிகரக அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் ரவி மிஸ்ரா, 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி உடனடி அச்சுறுத்தல் குறித்து நிலந்த ஜெயவர்தனவுக்கு முதலில் அறிவித்தார் என்று மாலக்க கூறியுள்ளார் 

எனவே லெப்டினன்ட் கேர்ணல் ரவி மிஸ்ராவிடம் திகதிகள், பெயர்கள் உள்ளிட்ட துல்லியமான விபரங்கள் எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரித்தால், முழு தகவல்களையும் சதியையும் வெளியே கொண்டு வர முடியும் என்று மாலக்க தெரிவித்துள்ளார்.

நிலந்த ஜெயவர்தனவுடன் இந்த தகவல் பகிர்ந்து கொள்ளப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, இந்திய இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைத் தலைவர்களுடன் இந்தியாவின் பாதுகாப்புச் செயலர் சஞ்சய் மித்ரா இலங்கைக்கு வந்ததாக ஷேஹான் மாலக்க கூறியுள்ளார்.

கொழும்பு சென்ற பேருந்து கோர விபத்து - ஒருவர் பலி - சிலர் ஆபத்தான நிலையில்

கொழும்பு சென்ற பேருந்து கோர விபத்து - ஒருவர் பலி - சிலர் ஆபத்தான நிலையில்

இந்திய அரசாங்கம் 

இதனையடுத்து 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி இராணுவத் தளபதிகள் உட்பட இலங்கை மற்றும் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இடையில் ஒரு கூட்டு பாதுகாப்பு சந்திப்பு இடம்பெற்றதாகவும் மாலக்க குறிப்பிட்டுள்ளார் 

ஏப்ரல் 8ஆம் திகதி நடைபெற்ற, இந்த கூட்டத்தில் உளவுத் தகவல்களை வழங்குவதிலும் பெறுவதிலும் முக்கியப் பிரமுகர்களான ரவி மிஸ்ரா மற்றும் நிலந்த ஜயவர்தன இருவரும் இருந்தனர்.

question-first-person-intelligence-easter-attack

எனினும் இருநாட்டு உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பின் போது இந்த முக்கியமான தகவல் ஏன் விவாதிக்கப்படவில்லை என்பது கேள்விக்குறியானது என்று மாலக்க குறிப்பிட்டுள்ளார்.

எனவே ரவி மிஸ்ரா தொடர்பில் இந்திய அரசாங்கம் ஏதேனும் விசாரணைகளை மேற்கொண்டதா என இலங்கை கேட்க வேண்டியது அவசியமானது என ஷெஹான் மாலக்க குறிப்பிட்டுள்ளார்.

இல்லையென்றால், இலங்கை அரசாங்கம் விசாரணையைக் கோர வேண்டும். லெப்டினன்ட் கேர்னல் ரவி மிஸ்ரா நாட்டின் பாதுகாப்புத் துறைகளின் முக்கிய அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் தொடர்பு வைத்திருந்திருக்கலாம்.

இந்தநிலையில் அவர் இந்த தகவலை நிலந்த ஜயவர்தனவுக்கு மட்டுமே வழங்கினாரா என்பதையும் இலங்கை  உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ஷெஹான் மாலக்க வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு ஜனாதிபதி ஆதரவு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு ஜனாதிபதி ஆதரவு

கிரிக்கெட்டின் சிறந்த பந்துவீச்சாளர்: இங்கிலாந்து வீரருக்கு லாரா புகழாரம்

கிரிக்கெட்டின் சிறந்த பந்துவீச்சாளர்: இங்கிலாந்து வீரருக்கு லாரா புகழாரம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
13ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US