கொழும்பு சென்ற பேருந்து கோர விபத்து - ஒருவர் பலி - சிலர் ஆபத்தான நிலையில்
கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேருந்து கோர விபத்திற்கு முகங்கொடுத்த நிலையில், அதற்கு சாரதியின் செயற்பாடு காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இன்று காலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 25 பேர் காயமடைந்த நிலையில் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மழை பெய்து கொண்டிருந்த போது பேருந்து சாரதியின் அதிக வேகமே விபத்திற்கு காரணமாகியுள்ளது.
இந்த விபத்தின் போது லொறியின் சாரதியும் லொறியில் பயணித்த ஏனைய இருவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
முதல் இணைப்பு
சிலாபம் - கொழும்பு பிரதான வீதியின் மாதம்பே, இரட்டைக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் 25இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 9.15 மணியளவில் பேருந்தும் லொறியொன்றும் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
