இனிப்பு பண்டங்கள் மற்றும் உணவுகளின் தரம்! மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்
இறக்குமதி செய்யப்படும் இனிப்பு பண்டங்கள் மற்றும் உணவுகளின் தரம் தொடர்பில் ஆராய்வதற்கான முறைமை ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தரமற்ற உணவுகளை உட்கொள்வதன் காரணமாக நுகர்வோர் இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிப்பு பண்டங்கள்
இலங்கை மருத்துவ சபையின் தலைவர் விசேட வைத்தியர் சுரந்த பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,''சந்தைக்குக் கொண்டு வரப்படும் இனிப்பு பண்டங்கள் மற்றும் உணவுகளின் தரம் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.
தரமற்ற உணவு
தரமற்ற உணவுகளை உட்கொள்வதன் காரணமாக நுகர்வோர் இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

இதுதவிர, உணவு ஒவ்வாமை, சுவாச நோய் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு மக்கள் முகங்கொடுக்கின்றனர்.
இல்லையெனில் அவற்றால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களைத் தவிர்த்துக் கொள்ள முடியாது'' என விசேட வைத்தியர் சுரந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam