கட்டாரில் ஈரான் நடத்திய தாக்குதல்.. திடீரென உச்சத்தை தொட்ட எரிவாயு விலைகள்
புதிய இணைப்பு
ஈரானிய தாக்குதல்களுக்குப் பிறகு கட்டார், எல்என்ஜி உற்பத்தியை நிறுத்தியதால் ஐரோப்பிய எரிவாயு விலைகள் கிட்டத்தட்ட 50 சதவீதம் உயர்ந்துள்ளன.
முக்கிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) ஏற்றுமதியாளரான கட்டார், எனர்ஜி மத்திய கிழக்கில் தாக்குதல்கள் காரணமாக உற்பத்தியை நிறுத்தியதாகக் கூறியது.
இதைத் தொடர்ந்து, “எல்என்ஜி ஓட்டங்களில் ஏற்படும் இடையூறுகள் ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் கிடைக்கக்கூடிய சரக்குகளுக்கு மீண்டும் போட்டியைத் தூண்டும்” என்று வூட் மெக்கன்சியின் எரிவாயு மற்றும் எல்என்ஜி ஆராய்ச்சியின் துணைத் தலைவர் மாசிமோ டி ஒடோர்டோ கூறினார்.
முதலாம் இணைப்பு
ஈரானிய தாக்குதல்களுக்குப் பிறகு கட்டார், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
கட்டாரின் அரசுக்குச் சொந்தமான எரிசக்தி நிறுவனமான கட்டார் எனர்ஜி, அதன் சில தளங்கள் மீது ஈரானிய பாதுகாப்பு படை தாக்குதல்களை நடத்தியது.
இதைத் தொடர்ந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தியை நிறுத்தியதாகக் கட்டார் கூறியுள்ளது.
பாரிய பின்னடைவு
தாக்கப்பட்ட தளங்கள், ராஸ் லஃபான் - ஒரு கடலோர எரிவாயு பதப்படுத்தும் தளம் - மற்றும் மெசயீத் - கத்தாரின் இயற்கை எரிவாயு உற்பத்திக்கான மற்றொரு முக்கிய தளம் என்று கட்டார் அறிவித்துள்ளது.

வளைகுடா நாடான கட்டார், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யாவுடன் உலகின் முன்னணி திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உற்பத்தியாளர்களில் ஒன்றாகும்.
இந்நிலையில், கட்டாரின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுத்தப்படுவது பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் அதேவேளை பதற்றத்தையும் அதிரகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.