புத்தளம் நகரசபை தலைவர் அப்துல் பாயிஸ் விபத்தில் உயிரிழப்பு
புத்தளம் நகரசபையின் தவிசாளரும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே ஏ பாயிஸ் (52) விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளத்தி;ல் இருந்து வண்ணாத்துவில்லு பகுதியில் உள்ள தமது தோட்டக்காணிப் பிரதேசத்துக்கு சென்று திரும்புகையில் இவர் வாகனத்தில் இருந்து தவறி வீழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பின்னர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக கே. ஏ பாயிஸ் பதவி
வகித்தார்.
பின்னர் அதில் இருந்து விலகி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பிரதி
அமைச்சராகவும் அவர் பதவி வகித்தார்.