70 பயணிகளுடன் பாலத்தில் சிக்கிய மற்றுமொரு பேருந்து...
அனுராதபுரம் - புத்தளம் சாலையில் உள்ள கலாவெவ பாலத்தில் சுமார் 70 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சிக்கிக் கொண்டுள்ளது.
சுமார் ஒன்றரை மணி நேரமாக பேருந்து அந்த இடத்தில் தேங்கிக் கிடப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இன்று (28) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இராணுவக் குழுக்கள் சம்பவ இடத்தில்
இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறியதாவது: "அனுராதபுரத்தில் நடந்த சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேருந்து மேலும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது, ஆனால் அது மேலும் பயணித்து சிக்கிக் கொண்டது.
தற்போது 60 பேர் அதில் பயணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு இராணுவக் குழுக்கள் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன, மேலும் ஒரு ஹெலிகொப்டரும் கோரப்படும்." என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
மேலும் 21 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 16 ஆம் திகதி முதல் இன்று வரை 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவற்றில் நேற்று 26 ஆம் திகதி முதல் இன்று 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகமாக, பதுளை மாவட்டத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.