உக்ரைனிடம் சிக்கும் வடகொரிய வீரர்கள்: புடினின் அதிரடி உத்தரவு
உக்ரைன் (Ukraine) - ரஷ்ய (Russia) போரில் ஈபடுத்தப்பட்டுள்ள வடகொரிய வீரர்களில் காயமடைந்த வீரர்கள், உக்ரைன் படையினரிடம் பிடிபடுவதைத் தடுக்க, அவர்களைக் கொல்ல ரஷ்ய மற்றும் வட கொரிய வீரர்கள் இருவருக்குமே உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூன்று வருடங்களாக உக்ரைனுடனான போர் நீடித்துவரும் நிலையில், தற்போது ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரிய வீரர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களின் படி, கிட்டத்தட்ட 300 வட கொரிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 2,700 பேர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த வீரர்கள்
அதேவேளை, தமது படை இழப்புகளை மறைப்பதற்காக இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்படுவதுடன் காயமடைந்த வீரர்கள் உக்ரைனிடம் பிடிபடுவதைத் தடுப்பதற்கு, அவர்களைக் கொல்ல ரஷ்ய மற்றும் வட கொரிய வீரர்கள் இருவருக்குமே உத்தரவிடப்பட்டுள்ளதாக ரஷ்ய நிபுணர் கூறியுள்ளார்.

மேலும், உக்ரைன் படைகளிடம் வடகொரிய வீரர்கள் உயிருடன் சிக்காமல் இருக்கவே இந்த இரகசிய உத்தரவினை புடின் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இரு வடகொரிய வீரர்கள் சமீபத்தில் உக்ரைன் படைகளிடம் உயிருடன் சிக்கியுள்ளனர்.
அத்துடன், குறித்த வடகொரிய வீரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஆவணம் ஒன்றில், அவர்கள் ரஷ்ய பிராந்தியத்தில் பிறந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அது போலியான ஆவணம் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் வழங்கியுள்ள தகவல்...
அதேநேரம், உக்ரைன் ஜனவரி 9ஆம் திகதி கைது செய்த இரு வட கொரிய வீரர்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள உளவு அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், பிடிபட்ட வட கொரிய வீரர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்படும் என்றே குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் Lee Seong-kwen தெரிவிக்கையில், வட கொரிய வீரர்கள் பிடிபடுவதற்குப் பதிலாக தற்கொலை செய்துக்கொள்ளுமாறு கூறப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
அது மாத்திரமன்றி, கொல்லப்பட்ட வடகொரிய வீரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களிலும் தற்கொலை செய்துகொள்ளும் முடிவை குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri