மலேசியாவிடமிருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு குத்தகை அடிப்படையில் விமானம்
ஸ்ரீ லங்கன் விமான சேவை புதிதாக ஏ - 320 ரக விமானம் ஒன்றை மலேசியாவிடம் இருந்து ஆறு ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் தற்போது ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான 22 விமானங்கள், சர்வதேச விமான சேவைகளில் ஈடுபட்டுவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் பெறப்பட்ட மலேசிய விமானம் முதலாவது பயணமாக எதிர்வரும் 29 ஆம் திகதி மாலைத்தீவிற்கு பயணிக்கும் என கூறப்படுகிறது.
நவீன தொழில்நுட்ப கருவி
குறித்த விமானத்தின் எரிபொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் நவீன தொழில்நுட்ப கருவி பொருத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் தேசிய விமான சேவை, கட்டுநாயக்காவிலிருந்து உலகின் 21 நாடுகளில் உள்ள 36 நகரங்களுக்கு தனது நேரடி விமான சேவைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
அசின், சிம்பு இணைந்து நடிக்கவிருந்த கைவிடப்பட்ட படம்.. இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா! First லுக் போஸ்டர் இதோ Cineulagam