ஹமாஸ் சுரங்க குழியில் இருந்து மீட்கப்பட்ட 5 பிணைக் கைதிகளின் உடல்கள்: இஸ்ரேல் இராணுவம் தகவல்
காசாவில் ஹமாஸ் அமைப்பினர் அமைத்த சுரங்க குழியில் இருந்து 5 பிணைக் கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.
இடன் சிஷெர்யா, சிவ் டடூ, எலியொ டுலிடனொ, நிக் பெய்சர், ரொன் ஷெர்மென் ஆகிய 5 பேரை ஹமாஸ் சுரங்க குழியில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் சடலமாக மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் போர் நடத்தி வருகின்ற நிலையில் ஹமாஸ் தாக்குதலுக்கு திருப்பி கொடுப்பதாக நினைத்து நடைபெற்று வரும் போரில் இதுவரை 20,424 பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர்.
போர் நிறுத்த கோரிக்கைகள்
மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் போர் நிறுத்த கோரிக்கைகளையும் கேட்காமல் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் போர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, காசாமுனையில் உள்ள பிணைக் கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுவித்துள்ளதோடு, பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுப்பட்டு வந்தது.

இந்நிலையில், காசாமுனையில் உள்ள 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், மீட்கப்பட்ட சடலங்களை இஸ்ரேல் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam