பிரபல நடிகையின் தொலைபேசி இலக்கங்கள் குறித்தும் விசாரணை
இலங்கையின் பிரபல நடிகை பியுமி ஹன்சமாலியின் (Piumi Hansamali) தொலைபேசி இலக்கங்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமானம் எவ்வாறு ஈட்டப்பட்டது என்பது குறித்து குறிப்பிடாது பியுமி பாரியளவு சொத்துக்களை திரட்டியுள்ளதாக குற்றம் சுமத்தி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளனர்.
தற்போதைய விசாரணைகள்
முதல் கட்டமாக பியுமியின் வங்கிக் கணக்குகள் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அனுமதி கோரப்பட்டிருந்தது.
தற்பொழுது பியுமியின் தொலைபேசி இலக்கங்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக சட்டவிரோத சொத்துக் குவிப்பு குறித்த பொலிஸ் விசாரணைப் பிரிவு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, பியுமியுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட 50இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போதைய விசாரணைகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டதனை விடவும் அதிகளவு சொத்துக்கள் பியுமியிடம் இருப்பதாக குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல் Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan