டுபாயில் தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரின் உதவியாளர் கைது
டுபாயில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான தனுவன் சதுரங்கவின் உதவியாளர் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து 20 கிராம் போதைப்பொருள், 900 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கடத்தல் மூலம் சம்பாதித்த 300,000 ரூபா பணம் ஆகியவற்றை விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு 12, செபஸ்டியன் மாவத்தையில் வசிக்கும் 19 வயதுடையவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பு
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கெசல்வத்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் கெசல்வத்த பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri