எதிர்வரும் வாரங்களில் மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு
எதிர்வரும் வாரங்களில் மின்வெட்டு தொடர்பிலான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி நாளை (14) ஐந்து மணித்தியால மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வெசாக் பண்டிகையை முன்னிட்டு மே மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது தற்போதைய மின்சார நெருக்கடி தொடர்பில் ஜனக ரத்நாயக்க தெரிவிக்கையில்,
அடுத்த சில வாரங்களில் இலங்கையில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், மின்வெட்டு காலம் குறைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டுகளை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri