கொழும்பில் காணாமல் போன தமிழரை தேட உதவி கோரும் பொலிஸார்
காணாமல் போன ஒருவரை கண்டு பிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கொழும்பு கொட்டாஞ்சேனையை சேர்ந்த 69 வயதான மாணிக்கம் துரைசிங்கம் ரொபின்சன் என்பவரே இவ்வாறு காணாமல் காணாமல் போயுள்ளார்.
கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ம் திகதி முதல் குறித்த நபர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நினைவாற்றல் குறைவு
ஐந்து அடி எட்டு அங்குலம் உயரமுடைய மாநிறமான ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நீல நிற டெனிம் காற்சட்டையும், நீல நிற சேர்ட்டும் அணிந்திருந்த நிலையில் குறித்த நபர் காணாமல் போயுள்ளார். இந்த நபருக்கு நினைவாற்றல் குறைவு என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் பற்றிய விபரங்கள் தெரிந்தால் 0718591571 அல்லது 0112431861 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் கொட்டாசேனை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
