அமெரிக்காவில் ஜனாதிபதியின் அறிவிப்புக்கு அருட்தந்தை ஜோசப் மேரி விடுத்துள்ள பகிரங்க சவால்
அமெரிக்காவிற்கு சென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ள கருத்தானது வெறும் கண்துடைப்பு மாத்திரமே. அதனை அவர் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அருட்தந்தை ஜோசப் மேரி (Rev.Fr. Joseph Mary)தெரிவித்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இதற்கு முன்னிருந்த அரசாங்கம் மனித உரிமை மீறப்பட்டுள்ள வேளையில் நாங்கள் அதனை ஆவணம் செய்வோம் என்று ஐ.நாவில் கூறியிருந்தார்கள். அதுவும் கிடப்பில் கிடந்ததுடன், இந்த அரசையும் குற்றம்சாட்டியிருந்தார்கள் அத்துடன் எமது மக்களை விலைபேசி வந்துவிட்டார்கள்.
இதே பாணியில் ஜனாதிபதியும் அமெரிக்காவில் கூறியது பழைய அரசை போன்று வெறுமனே வாய் சொல்லே தவிர செயல்முறையில் நடக்குமா என்பது கேள்விக்குறி.
ஆகவே கண்துடைப்புக்காக இதை செய்கின்றார்களா? மனதார உணர்ந்து செயற்படுகின்றார்களா? இந்த மக்கள் நிம்மதியாக வாழ சிங்கள மக்களுடன் கை கொடுத்து வாழ இவர்கள் செய்ய வேண்டியது காலத்தின் தேவை.
ஆனால் வெளியில் இவ்வாறு பேசிவிட்டு மீண்டும் நாட்டுக்கு வந்து அவற்றை மறந்து விடுகின்றனர். இதை தான் நான் கடந்த காலங்களிலிருந்து பார்த்து வருகின்றேன்.
ஜனாதிபதி கூறிய வார்த்தையை செயற்படுத்துபவராக இருந்தால் அவர் ஒரு பெயர் போன தலைவராவார். அவர் மக்களை இணைத்து செயற்பட வேண்டும் என்றும் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்...
அமெரிக்காவில் தமிழர்கள் குறித்து கோட்டாபய கூறிய விடயம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை
நியூயோர்க்கில் குவைத் முக்கியஸ்தரை சந்தித்து கலந்துரையாடியுள்ள இலங்கை ஜனாதிபதி
புலம்பெயர் தமிழர்களிடம் ஜனாதிபதி கோட்டாபய நியூயோர்க்கிலிருந்து விடுத்துள்ள கோரிக்கை
தெஹ்ரான் இதுவரை கண்டிராத மிக உக்கிர வான்வழித் தாக்குதல்: தாழ்வாகப் பறந்த போர் வானூர்திகள் - அதிர்ந்த நகரம்
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் தீவிரமடையும் பதற்றம்! சுட்டுவீழ்த்தப்படும் ஈரானிய குண்டுவீச்சு விமானங்கள்
நாட்டின் முக்கிய நகரங்களில் நெருக்கடி! பணிக்கு வராதோருக்கு கடும் எச்சரிக்கை - வெளியான அதிரடி அறிவிப்பு
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
T20 உலக கிண்ணத்தால் ஒத்திவைக்கப்பட்ட திருமணம் - நீண்டகால தோழியை மணக்கும் குல்தீப் யாதவ் News Lankasri
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam