மாகாண சபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெறும் : சிவநேசதுரை சந்திரகாந்தன்
மாகாணசபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெறும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (Sivanesathurai Chandrakanthan) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,
உள்ளுராட்சிமன்ற தேர்தலை பிற்போடப்பட்டமையானது நாட்டில் தற்போதைய பொருளாதார சூழ்நிலையினை கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த முடிவினை அவர் எடுத்துள்ளார். ஆனால் தேர்தலுக்கு அச்சப்பட்டு இந்த முடிவினை எடுக்கவில்லை.
கோவிட் அச்சுறுத்தலுக்கு பின்னர் மக்களின் நிலையினைக்கொண்டே இந்த நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்துள்ளது. இந்த நிலைமை சுமுகமானதும் நிச்சயமாக விரைவில் உள்ளுராட்சிமன்ற தேர்தல்கள் நடைபெறும்.
ஆனால் மாகாண சபை தேர்தல் வருடக்கணக்கில் பிற்போடப்படும் என்று எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை. இந்த வருட நடுப்பகுதியில் அல்லது இறுதிப்பகுதியில் நடைபெறும் என்று நான் கருதுகின்றேன் என தெரிவித்துள்ளார்.
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
அந்த மக்களின் ஊடுருவலால் ஐரோப்பா சீரழியுது: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கடும் விமர்சனம் News Lankasri