மாகாண சபைத் தேர்தல் தாமதம் - சுரேஷ் பிரேமச்சந்திரனின் முக்கிய அறிவிப்பு
இலங்கை அரசாங்கம், மாகாணசபை தேர்தல் தொடர்பாக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைத்திருப்பதால் மாகாணசபை தேர்தல்கள் பல வருடங்கள் தள்ளிப்போகலாம் என தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மாகாண சபை தேர்தல்
மேலும் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது,
இலங்கை அரசாங்கம், மாகாண சபை தேர்தல் தொடர்பாக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைத்திருப்பதால் மாகாணசபை தேர்தல்கள் பல வருடங்கள் தள்ளிப்போகலாம் என்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன். தேர்தலை மிக விரைவில் நடத்துவதற்கான அழுத்தங்களை ஏனைய கட்சிகளுடன் இணைந்து உருவாக்க வேண்டும் எனவும், மாகாணசபைத் தேர்தலின் அவசியத்தை இராஜதந்திர சமூகத்திற்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இந்த விடயங்கள் தொடர்பாக இந்தியா, நெதர்லாந்து, மற்றும் கனடா தூதுவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது தொடர்பிலும் எடுத்துரைக்கப்பட்டது.
புதிய அரசியல் யாப்பு
மேலும், அரசாங்கம் கொண்டு வர யோசிக்கும் புதிய அரசியல் யாப்பு தொடர்பாகவும், அந்த யாப்பில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாகவும், அதில் அடங்க வேண்டிய விடயங்கள் குறித்தும் சகல தமிழ் கட்சிகளுடனும் கருத்தொற்றுமைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
எனவே, இதற்காக நாம் அனைவரும் ஒருமித்த ஒரு தீர்வுத்திட்டத்தை அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்வு காணல் தொடர்பாக பல்வேறுபட்ட ஜனாதிபதிகளால் பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டு பல்வேறு வரைபுகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆராய்ந்து, தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு வரைபை அனைத்துக் கட்சிகளும் இணைந்து உருவாக்க வேண்டும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
கிவுல்ஓயா திட்டம்
மேலும், நாடு மிகவும் வங்குரோத்தான சூழ்நிலையில் இருக்கின்ற போதும் நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப்பெருக்கு மற்றும் அனர்த்தங்கள் காரணமாக பல்லாயிரம் கோடி பெறுமதியான நட்டங்கள், உயிரிழப்புகள், உள்நாட்டு - வெளிநாட்டு கடன்கள் என பல இழப்புக்கள் ஏற்பட்டன.
புதிய வரலாறு படைக்கும் தங்கம்: பாபா வங்கா கணிப்பு குறித்து வெளியாகியுள்ள தகவல் - நடக்கப்போவது என்ன..!
இந்த சமயத்தில், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய கிவுல்ஓயா என்ற புதிய நீர்ப்பாசனத் திட்டம் ஒன்றையும் உருவாக்கி, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றங்களுக்கு மேலதிகமாக சிங்களக் குடியேற்றங்களை விஸ்தரிக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்த எத்தனிக்கும் இந்த திட்டத்தை ஒட்டுமொத்த தமிழ் மக்களும் நிராகரிக்க முயற்சி எடுக்க வேண்டும்.

இதற்கு அரசாங்கம் செலவு செய்ய உத்தேசித்துள்ள 23, 500 கோடி ரூபாயை எப்படி புரட்டப் போகிறார்கள் என்பதை அரசாங்கம் இலங்கை மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் வெளிப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிராக நடைபெற உள்ள போராட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam