குருநாகலில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான புதிய தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கி வைப்பு
குருநாகல் (Kurunegala) மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சுய தொழில் முயற்சியாளர்களுக்கு புதிய தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வானது, நேற்றைய தினம் (15.06.2024) குருநாகல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, இலத்திரனியல் கோழிக் குஞ்சு பொறிக்கும் இயந்திரங்கள் மற்றும் கோழிக் குஞ்சுகள் ஆகியன குருநாகல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சுய தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பங்கேற்றோர்
உணவு மற்றும் போசணையை கட்டியெழுப்பும் செயற்பாட்டுத் திட்டத்தின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன (Dinesh Gunawardena) மற்றும் வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் (Naseer Ahamed) ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர்களான சமன்பிரிய ஹேரத், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, யூகே சுமித் உடுகும்புற, மாகாண பிரதம செயலாளர் தீபிகா கே குணரத்தின மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ரத்நாயக்க உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
