இலங்கைக்கு சுற்றுலா வந்த உக்ரைன் யுவதிக்கு நேர்ந்த கதி
கொழும்பிலிருந்து (Colombo) பதுளை (Badulla) நோக்கி சென்ற தொடருந்தில் பயணித்த வெளிநாட்டு உக்ரைன் யுவதி ஒருவர் தொடருந்து பாதையில் இருந்த சுரங்கத்தின் மீது மோதி படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றையதினம் (15.06.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 23 வயதுடைய உக்ரைனிய யுவதி ஒருவரே காயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக சிகிச்சை
அத்துடன், ஒஹியா மற்றும் பட்டிபொல ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள சுரங்கப் பாதையில் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, காயமடைந்த குறித்த யுவதி, தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri