இலங்கைக்கு சுற்றுலா வந்த உக்ரைன் யுவதிக்கு நேர்ந்த கதி
கொழும்பிலிருந்து (Colombo) பதுளை (Badulla) நோக்கி சென்ற தொடருந்தில் பயணித்த வெளிநாட்டு உக்ரைன் யுவதி ஒருவர் தொடருந்து பாதையில் இருந்த சுரங்கத்தின் மீது மோதி படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றையதினம் (15.06.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 23 வயதுடைய உக்ரைனிய யுவதி ஒருவரே காயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக சிகிச்சை
அத்துடன், ஒஹியா மற்றும் பட்டிபொல ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள சுரங்கப் பாதையில் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, காயமடைந்த குறித்த யுவதி, தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam