எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பவர்களுக்கு நீராகாரம் வழங்குங்கள் - வடக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை
எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் மக்களுக்கு உள்ளூராட்சி சபைகள் மற்றும் பொது அமைப்புக்கள் இயன்றவரை நீராகாரத்தை வழங்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கோரிக்கை
"நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில் வடக்கு மாகாணத்திலும் மக்கள் வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்கின்றார்கள்.
மேலும், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருவதால் அதனை பெறுவதற்காக நோய் நிலைமை உள்ளவர்களும் எரிபொருளுக்காக நீண்டநேரம் காத்திருக்கின்ற நிலைமையை நான் உணர்கின்றேன்.
நீராகாரம்
ஆகவே, இயன்றவரை எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு தற்போதைய தருணத்தில் நீராகாரத்தை வழங்கி உதவுமாறு உள்ளூராட்சி சபைகள், சமூக அமைப்புக்கள் மற்றும் கொடை வள்ளல்கள் ஆகியோரை கேட்டுக்கொள்கின்றேன்" என குறிப்பிட்டுள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
