எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பவர்களுக்கு நீராகாரம் வழங்குங்கள் - வடக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை
எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் மக்களுக்கு உள்ளூராட்சி சபைகள் மற்றும் பொது அமைப்புக்கள் இயன்றவரை நீராகாரத்தை வழங்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கோரிக்கை

"நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில் வடக்கு மாகாணத்திலும் மக்கள் வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்கின்றார்கள்.
மேலும், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருவதால் அதனை பெறுவதற்காக நோய் நிலைமை உள்ளவர்களும் எரிபொருளுக்காக நீண்டநேரம் காத்திருக்கின்ற நிலைமையை நான் உணர்கின்றேன்.
நீராகாரம்
ஆகவே, இயன்றவரை எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு தற்போதைய தருணத்தில் நீராகாரத்தை வழங்கி உதவுமாறு உள்ளூராட்சி சபைகள், சமூக அமைப்புக்கள் மற்றும் கொடை வள்ளல்கள் ஆகியோரை கேட்டுக்கொள்கின்றேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri