கம்பஹா மாவட்டம்: நீர்வெட்டு தொடர்பான அறிவிப்பு
கம்பஹா உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று இரவு (22) 8 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய இன்று இரவு 10.00 மணி முதல் நாளை (23) காலை 06.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பணிகள்
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் யக்கல பாலத்தின் குழாய் அமைப்பில் ஏற்பட்டுள்ள திருத்தப்பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
பகுதிகள்
கம்பஹா நகரம், கம்பஹா மிரிஸ்வத்த வீதி, ஹன்சகிரி வீதி, யக்கல வீதி, ஒருதொட்ட வீதியிலிருந்து கறுப்புப் பாலம் வரையிலான பகுதி, உடுகம்பொல வீதியில் சதொசவுக்கு அருகில் உள்ள பாலம் பகுதி மற்றும் ஜா-எல வீதியில் உள்ள புகை பரிசோதனை நிலையம் வரையான பகுதிகளிலேயெ நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

முதலாம் ஆண்டு திருமண நாள், தனது மகன்களின் முகத்தை காட்டிய விக்னேஷ் சிவன், நயன்தாரா- கியூட் போட்டோஸ் Cineulagam

நயன் வீட்டில் மட்டுமல்ல செல்வராகவன் வீட்டிலும் விசேஷம்! கோயிலில் இருந்து வெளியான புகைப்படம் Manithan
