வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களிடம் அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை

Batticaloa Sri Lanka Fisherman Ramalingam Chandrasekar Cyclone Ditwah Ministry of Fisheries of Sri Lanka
By Thirumal Jun 29, 2026 03:26 PM GMT
Report

வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் தங்கள் சொந்த மண்ணுக்கு திரும்பி முதலீடு செய்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கும் பங்களிக்க வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட இறால் பண்ணையாளர்களுக்கான நிதியுதவி காசோலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று (28.06.2026) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அமெரிக்கா - ஈரான் இராணுவ மோதலால் மசகு எண்ணெய் விலை உயர்வு

அமெரிக்கா - ஈரான் இராணுவ மோதலால் மசகு எண்ணெய் விலை உயர்வு

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியுதவி 

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாதிக்கப்பட்ட 30 இறால் பண்ணையாளர்களுக்கு மொத்தமாக 95 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நிதியுதவி காசோலைகளை வழங்கி வைத்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களிடம் அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை | Provide Money People Affected By Cyclone Titva  

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் கடற்றொழிலாளர்கள் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என்றும், அதற்காக தேவையான நிவாரண மற்றும் மீள்கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டம் கடல் வளங்கள், வாவிகள் மற்றும் உவர்நீர் வளங்கள் நிறைந்த பிரதேசமாக இருப்பதால், இறால், நண்டு மற்றும் பல்வேறு நீர்வாழ் உயிரின வளர்ப்புகளுக்கான மிகுந்த வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இவ்வளங்களை அறிவியல் ரீதியாகவும் நிலையான முறையிலும் பயன்படுத்துவதன் மூலம் மாவட்டத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் எனவும் அவர் மேலும், சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கடல் மற்றும் நன்னீர் மீன்வள வளர்ப்புத் துறையில் அதிகளவான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டால் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும் என்றும், இளைஞர்களுக்கு நிலையான வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய தொழில்முயற்சிகள் உருவாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆவலுடன் காண காத்திருந்த பொம்மை திரைப்படம் - ஜெர்மன் திரையரங்குகளில்.. இன்றே பதிவு செய்யுங்கள்!

ஆவலுடன் காண காத்திருந்த பொம்மை திரைப்படம் - ஜெர்மன் திரையரங்குகளில்.. இன்றே பதிவு செய்யுங்கள்!

புலம்பெயர் தமிழர்களுக்கான விசேட அழைப்பு

வெளிநாடுகளில் வாழும் மட்டக்களப்பு புலம்பெயர் தமிழர்களுக்கு விசேட அழைப்பு விடுத்த அமைச்சர், தங்களது சொந்த மண்ணின் அபிவிருத்தியில் பங்காளிகளாக மாற வேண்டிய தருணம் இதுவென குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் இயற்கை வளங்களும், முதலீட்டு வாய்ப்புகளும் ஏராளமாக உள்ளன.கடல் வளங்கள், வாவிகள், இறால் மற்றும் நண்டு வளர்ப்பு உள்ளிட்ட துறைகளில் பாதுகாப்பான முதலீடுகளை மேற்கொள்ள முடியும்.

இதன் மூலம் உங்களுக்கும் பொருளாதார இலாபம் கிடைப்பதோடு, மாவட்டத்தில் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்.

ஆகவே, புலம்பெயர் தமிழர்கள் தங்கள் சொந்த மண்ணுக்கு திரும்பி முதலீடு செய்து மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கும் பங்களிக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களிடம் அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை | Provide Money People Affected By Cyclone Titva

அத்துடன், இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட உற்பத்தியாளர்களை மீண்டும் உற்பத்தி செயற்பாடுகளுக்கு திருப்பி, நாட்டின் நீர் வாழ் உயிரின உற்பத்தியை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகவே இந்த நிதியுதவி வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, கரையோர நீர்வாழ் உயிரினங்கள் வளர்ப்பு அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஜீ. ஜீ. குணசேன, இலங்கை தேசிய நீர்வாழ் உயிரினங்கள் வளர்ப்பு அதிகார சபையின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) பொறியியலாளர் என். சிவலிங்கம், கரையோர நீர்வாழ் உயிரினங்கள் வளர்ப்பு அபிவிருத்தித் திணைக்களத்தின் கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் எஸ். ரவிக்குமார், அரச அதிகாரிகள், கடற்றொழில் துறை உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர். 

மகிந்த அபிவிருத்தி செய்த நாடு வீழ்ச்சி பாதையில்! எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு

மகிந்த அபிவிருத்தி செய்த நாடு வீழ்ச்சி பாதையில்! எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு

GalleryGalleryGallery

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US