யுத்தக்குற்றங்கள் இடம்பெறவில்லையென முடிந்தால் நிரூபியுங்கள்! சபையில் கஜேந்திரன் பகிரங்க சவால்
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் இலங்கை பாதுகாப்புப்படையினர் எவ்வித குற்றங்களையும் இழைக்கவில்லை என்பதை, முடிந்தால் சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாக நிரூபிக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழர் தாயகத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதிப்பதோடு, மாவீரர் துயிலும் இல்லங்களில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, இன்றைய தினம் செல்வராசா கஜேந்திரன் தனது உரையில் இலங்கை படையினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த கருத்திற்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தனது எதிர்ப்பினை பதிவு செய்திருந்தார்.
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri