நம்பி போட்டோம் ஓட்டு வைச்சிட்டீங்களே வேட்டு – மலையக மக்கள் விசனம்
நாட்டில் பொருட்களின் விலைகள் உயர்வடைந்து செல்வதனை கண்டித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இன்றைய தினம் தலாவாக்கலை நகரில் இவ்வாறான ஓர் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரத்தின் வழிகாட்டுதலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பொருட்களின் விலை ஏற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“உங்களை நம்பி போட்டோம் வோட்டு, எங்களுக்கு வைச்சிட்டீங்களே வேட்டு” , “விண்ணைத் தொடும் விலை வாசியை குறையுங்கள்” என பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உரத்தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை மற்றும் அடக்குமுறைகளக்கு எதிராக இந்தக் கண்டனப் பேரணி முன்னெடுக்கப்படுவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணி தெரிவித்துள்ளது.



பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam