விடுதலைப்புலிகளின் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதாக கூறி தெற்கில் எழுந்துள்ள எதிர்ப்பு-செய்திகளின் தொகுப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா. சாணயக்கியனுக்கு எதிராக சுவிட்ஸர்லாந்து தூதரகத்திற்கு முன்பாக போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ஆகியோர் அதிகாரப் பகிர்வின் ஊடாக அதிகாரப் பரவலாக்கல் எனும் தொனிப்பொருளிள் தெற்கில் வேலைத்திட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
சமஷ்டி தொடர்பாக தெற்கில் நிலவிவரும் பிழையான கண்ணோட்டத்தை இல்லாது செய்து, தமிழ் மக்களின் இனப்பிரச்சினை மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக தெளிவுப்படுத்தும் வகையிலேயே இந்த வேலைத்திட்டம் அமைந்திருந்தது.
இதன் ஓர் அங்கமாக அண்மையில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுவிட்ஸர்லாந்து தூதுவரையும் சந்தித்து, கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிலையில், இந்த செயற்பாடுகளுக்கு எதிர்ப்பினை வெளியிடும்வகையிலேயே இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
சிங்கள இராவய மற்றும் அப்பே ஜனதா பக்ஷய எனும் கட்சியினராலேயே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.