றம்புக்கண துப்பாக்கிச்சூட்டில் பலியானவரின் மகள் முன்வைத்துள்ள உருக்கமான வேண்டுகோள்
றம்புக்கணை பகுதியில் இடம்பெற்ற மக்கள் போராட்டம் பின்னர் வன்முறையாக மாறியதனால் பொலிஸார் போராட்டகாரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
இதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
றம்புக்கணையைச் சேர்ந்த 42 வயதுடைய கே.டி.லக்ஷான் என்பவர் நேற்று றம்புக்கணையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் பலியானவரின் மகள் உருக்கமான வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளார்.
தனது தந்தையின் சார்பாக அனைத்து தரப்பினரிடமிருந்தும் நீதியை எதிர்பார்ப்பதாகவும்,தனக்கு நிதியுதவி தேவையில்லை என்றும், இந்த சம்பவத்திற்கு நீதி வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்...
ரம்புக்கனை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் அம்பலமான விடயம்
ரம்புகனையில் மறைக்கப்பட்ட விடயம் - பொலிஸாரின் அடாவடித்தனம் அம்பலம்



