இலங்கையில் கைதான இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி உண்ணாவிரத போராட்டம்
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 32 இந்திய கடற்றொழிலாளர்களையும் படகுடன் விடுதலை செய்யுமாறு கோரி இராமேஸ்வரத்தில் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
32 கடற்றொழிலாளர்கள்
இராமேஸ்வர விசைப்படகு கடற்றொழிலாளர்கள், எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக நேற்று (25.02.2025) நடந்த கடற்றொழிலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் துறைமுகங்களில் இருந்து கடற்றொழிலுக்கு சென்று எல்லை தாண்டி தொழிலில் ஈடுபட்டதாக 32 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 32 இந்திய கடற்றொழிலாளர்களையும் படகுடன் விடுதலை செய்யுமாறு கோரி இராமேஸ்வரத்தில் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலதிக தகவல் - ஆஸிக்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 8 நிமிடங்கள் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam