கிளிநொச்சியில் வீதி அபிவிருத்தியை முன்னெடுக்க கோரி போராட்டம்(Photos)
கிளிநொச்சி வட்டக்கச்சி விநாயகர் வீதியை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுக்குமாறு இன்று(22.02.2023) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக கூடிய மக்கள், கவனயீர்ப்பில் ஈடுபட்டு மாவட்ட செயலக வளாகம் வரை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

வீதியை அபிவிருத்தி செய்ய சிலர் இடையூறு
கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சிறிமோகன் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, குறித்த வீதியை
அபிவிருத்தி செய்வதற்கு ஒரு சிலர் இடையூறு விளைவிப்பதாகவும், அதனால்
மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், மாணவர்கள் என பலரும் பல்வேறு
பிரச்சினைகளிற்கு முகம் கொடுப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் அரசாங்க அதிபருக்கு மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கேட்டறிந்த மேலதிக அரசாங்க அதிபர், அதற்கான நடவடிக்கையை எடுப்பதாகவும், மாவட்ட அரசாங்க அதிபர் இல்லாமையால் அவரை சந்திக்க முடியாது எனவும் குறிப்பிட்டதுடன், அரசாங்க அதிபர் இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை முன்னெடுப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது பிரதேச மக்களும், முன்னைய நாள் பிரதேச சபை உறுப்பினர்களான
மு.சிவமோகன் மற்றும் ஜீவராஜ் ஆகியோர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri