ஹட்டனில் வங்கி ஊழியர்கள் மற்றும் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்
வரி விதிப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹட்டனில் வங்கி ஊழியர்கள் மற்றும் வைத்தியர்கள் இன்று (08.02.2023) ஹட்டன் மக்கள் வங்கிக்கு முன்னால் உள்ள ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வரிவிதிப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு முழுவதிலும் உள்ள அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் வங்கிகளை மூடி ஆர்ப்பாட்டத்திலும் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுப்பட்டுள்ளனர்.
தனியார் மற்றும் அரச வங்கி ஊழியர்கள்
ஹட்டன் நகரில் உள்ள தனியார் மற்றும் அரச வங்கி ஊழியர்கள், வரிபாரம் வானளவு, ஊழியர்கள் நடு வீதியில் மக்களுடைய வைத்தியசாலை அந்தரங்கத்தில் மக்களின் வாழ்க்கை ஆபத்தில் புத்தி ஜீவிகள் நாட்டுக்கு வேண்டாமா? போன்ற வாசனங்கள் எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம் கோசமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, ஹட்டன் நெசனல் வங்கி உள்ளிட்ட பல வங்கிகளை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் வைத்தியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டகாரர்கள் சுமார் ஒரு மணித்தியாலம் வரை ஆர்ப்பாட்டத்தினை செய்து
விட்டு மீண்டும் களைந்து சென்றுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 8 நிமிடங்கள் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
