பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழகங்களில் போராட்டம்

Eastern University of Sri Lanka Sri Lanka Eastern Province Northern Province of Sri Lanka
By Kajinthan Jun 14, 2024 10:46 AM GMT
Report

வவுனியா (Vavuniya) பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள் இன்று (14.06.2024) பம்பைமடுவில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தமது சம்பள முரண்பாட்டை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், குறித்த கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

சுமார் அரை மணி நேரம் இடம்பெற்ற இந்த கவயீர்ப்புப் போராட்டத்தினை அடுத்து, கல்வி சாரா ஊழியர்கள் தங்களுக்கு இடையிலான கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

protest-in-eastern-university

protest-in-eastern-university

protest-in-eastern-university

செய்தி - திலீபன்

யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

மே இரண்டாம் திகதி முதல் 44 நாட்களாக தொடர் பணி பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால் யாழ். பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் இன்று 10.45 மணியளவில் குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

சம்பள முரண்பாடு மற்றும் கொடுப்பனவுகளை அதிகரித்து வழங்குதல் போன்ற பல நீண்டகால பிரச்சனைகளுக்கு தீர்வுகாணவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

protest-in-eastern-university

protest-in-eastern-university

protest-in-eastern-university

செய்தி - கஜிந்தன்

கிழக்கு பல்கலைக்கழகம்

அதேவேளை, கிழக்குப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது, இன்று (14.06.2024) கிழக்குப் பல்கலைக்கழக பிரதான வளாகம் முன்பாக இடம்பெற்றுள்ளது.

அத்துடன், பல்கலைக்கழக போதனைசாரா ஊழியர்கள் முன்னெடுக்கும் தொடர் பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், அரசாங்கமுமே பொறுப்பேற்க வேண்டும் என கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 

கொழும்பு சென்ற பேருந்தில் ஏற்படவிருந்த அனர்த்தம் - 40 உயிர்களை காப்பாற்றிய சாரதி

கொழும்பு சென்ற பேருந்தில் ஏற்படவிருந்த அனர்த்தம் - 40 உயிர்களை காப்பாற்றிய சாரதி

எழுத்து மூல தீர்வு

இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் ஏ.ஜெகராஜு கருத்து தெரிவிக்கையில்,

சம்பள மற்றும் கொடுப்பனவு அதிகரிப்பு கோரிக்கையை முன்வைத்து பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர்கள், கல்விசார் உதவி உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விசார ஊழியர்கள் இணைந்து மே மாதம் 2ஆம் திகதி தொடக்கம் இன்றுடன் 44 நாட்களாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

protest-in-eastern-university

எமது கோரிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் ஆகியோருடன் பேசி உடன்பாட்டுக்கு வந்து அதற்கான எழுத்து மூல தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தோம்.

ஆனால், அரசாங்கமும் இதற்குப் பொறுப்பான அரச நிறுவனங்களும் எமக்கான தீர்வை வழங்காது இழுத்தடிப்புச் செய்து வருவதையே அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

பல்கலைக்கழக கட்டமைப்பில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் பொறுப்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவையே சாரும்.

பட்டமளிப்பு நிகழ்வு

ஆதலால், இந்த இடத்தில் தலையீடு செய்து ஊழியர்களின் கோரிக்கைளுக்கு செவிசாய்த்து பல்கலைக்கழக அனைத்து ஊழியர்களினதும் பொறுப்புவாய்ந்த அதிகாரியாக ஆணைக்குழு தலைவர் செயற்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம். 

போதனைசாரா ஊழியர்களை புறந்தள்ளி பல்கலைக்கழக செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் என சிலர் சிந்திக்கின்றனர்.

ஆனால், எமது பணிபகிஷ்கரிப்பு காரணமாக பட்டமளிப்பு நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதை அவர்கள் சிந்திக்க தவறியுள்ளனர்.

protest-in-eastern-university

கல்விசாரா உத்தியோகத்தர்களின் பலம் குறித்து அவர்கள் நன்கு உணரும் வகையில் சில நடவடிக்கைகளை இன்று தொடக்கம் ஆரம்பித்துள்ளோம்.

அந்த வகையில் பகிஷ்கரிப்பையும் பொருட்படுத்தாதது மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் வழங்கிவந்த சேவைகள் சிலவற்றை இன்றுமுதல் நிறுத்தியுள்ளோம்.

protest-in-eastern-university

எமது பிரச்சினைக்கு விரைவான தீர்வு வழங்கப்படாவில் மனிதாபிமான அடிப்படையில் தொடர்ந்தும் வழங்கப்படும் அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் முடக்கி சிலருக்கு பாடம் புகட்டவும் தயங்க மாட்டோம் என தெரிவித்தார்.

செய்தி - குமார்

தேர்தல்களைப் பிற்போட்டால் மக்கள் கொதித்தெழுவார்கள் : சாணக்கியன் தெரிவிப்பு

தேர்தல்களைப் பிற்போட்டால் மக்கள் கொதித்தெழுவார்கள் : சாணக்கியன் தெரிவிப்பு

இலங்கை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மற்றுமொரு முக்கிய தீர்ப்பு

இலங்கை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மற்றுமொரு முக்கிய தீர்ப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கரம்பன் தெற்கு, Markham, Canada

04 Mar, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Ajax, Canada

06 Mar, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US