அரசாங்கத்தை எதிர்த்து நாளை மறுதினம் கொழும்பில் போராட்டம்: ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு (photo)
கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நாளைமறு தினம் (20.02.2023) மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது, இதில் அனைத்துத் தரப்பினரையும் பங்கேற்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (17.02.2023) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தலை ஒத்திவைக்கும் யானை, காகம், மொட்டு மற்றும் திசைகாட்டியின் கூட்டு உபாயங்களை ஜனநாயக ரீதியில் தோற்கடிப்போம்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த எடுக்கும் முயற்சிகளில் தேசிய மக்கள் சக்தி
ஏன் ஈடுபடுவதாக இல்லை?, பின்வாங்கக் காரணம் யாது?
தேர்தலைப் பிற்போட்டால் சர்வதேச ஆதரவு கிடைக்காது போகும். நாடு மேலும்
பாதாளத்திலயே விழும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
