இலங்கையில் இராணுவ ஆட்சி - ஜனாதிபதி செயலகம் முன் பாரிய ஆர்ப்பாட்டம்
17 தொழிற்சங்கத்தினர் இணைந்து இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தின் முன் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இராணுவ ஆட்சியின் ஊடாக சிவில் நிர்வாகத்தை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது, இலவச கல்விக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை தவிர்த்து கொள்ள வேண்டும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள இலங்கை ஆசிரிய சங்கத்தின் தலைவர் ஜோஸப் ஸ்டாலின் உள்ளிட்ட சிலில் அமைப்பினரை விடுதலை செய்ய வேண்டும் போன்ற விடயங்களை வலியுறுத்தி குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில், தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் ஆசிரியர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விரைவில் தீர்வை பெற்றுத் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டகாரர்கள் ஜனாதிபதி செயலாளரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
அத்துடன், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 8ஆம் திகதி இலங்கை ஆசிரிய சங்கத்தின் தலைவர் மற்றும் சிவில் அமைப்பினர் நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு புறம்பான இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு பொலிஸாரால் செய்யப்பட்டமையையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



