இந்திய கடற்றொழிலாளர்களின் தீக்குளிப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
தங்கச்சிமடத்தில் இன்று (4) நடைபெற இருந்த கடற்றொழிலாளர்களின் தீக்குளிப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் காத்திருப்பு போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டடதாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களையும் விசைப்படகுகளையும், எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், கிடப்பில் போடப்பட்டுள்ள இரு நாட்டு கடற்றொழிலாளர் பேச்சுவார்த்தை துரிதப்படுத்தி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்று தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
முன்வைக்கப்படும் கோரிக்கைகள்
கடற்றொழிலாளர்களின் ஐந்தாவது நாள் போராட்டம் இன்று (4) கடற்றொழிலாளர்கள் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து தங்கச்சிமடத்தில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிஸார் அதிகளவு வரவழைக்கப்பட்டு தீ அணைக்கும் கருவி உள்ளிட்டவற்றுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் இருந்தனர்.
இந்நிலையில் கடற்றொழிலாளர்களின் போராட்ட குழு நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தில் நேற்று இரவு (3) தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இலங்கை கடற்படை வசமுள்ள கடற்றொழில் படகுகளுக்கு தமிழக அரசு வழங்கும் இழப்பீடு தொகையை 6 இலட்சத்தை உயர்த்தி 8 இலட்சம் வழங்கப்படும், சிறைபிடிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் தின உதவி தொகை ரூ.350 உயர்த்தி ரூ.500 ஆக வழங்கப்படும், கடற்றொழிலாளர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் மத்திய அமைச்சரை கடற்றொழிலாளர்கள் குழு சந்திக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு வெளியானதின் அடிப்படையில் கடற்றொழிலாளர்கள் இன்று (4) நடத்த இருந்த தீக்குளிக்கும் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தங்கச்சி மடத்தில் நடைபெற்று வரும் கடற்றொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டம் தொடரும் எனவும், அடுத்த கட்ட போராட்டம் குறித்து இன்று மாலை கடற்றொழிலாளர்கள் கலந்தாலோசித்து அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் இன்றுடன் எட்டாவது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






நடிகையுடன் கிசுகிசு.. உண்மையான மனைவி போட்டோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் ஸ்டாலின் Cineulagam

இன்னும் 25 நாட்களில் ஆரம்பமாகும் சனிப்பெயர்ச்சி: புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கபோகும் 5 ராசிகள் Manithan
