வெளிநாடு அனுப்புவதாக பல கோடி ரூபாவை ஏமாற்றிய நபர்! கொழும்பில் வீதிக்கிறங்கி போராட்டம்
திருகோணமலை - குச்சவெளி பிரதேசத்தை சேர்ந்த ஆதில் எனும் நபர் சுமார் 200இற்கும் மேற்பட்ட நபர்களை வெளிநாட்டிற்கு அனுப்பவதாகக் கூறி பல கோடி ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்று(15.05.2026) இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே போராட்டக்காரர்கள் மேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஊழலுக்கு துணை செய்யும் பொலிஸ் அதிகாரிகள்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
இந்த விவகாரம் தொடர்பாக நாம் முறைப்பாடு செய்வதற்காக குச்சவெளி பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பொழுது ஆதில் எனும் நபர் குறித்த முகவரியில் இல்லை என தெரிவித்தனர்.
இதனையடுத்து, நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தும் கூட அந்த நபர் குறித்த முகவரியில் இல்லை என்றே பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
குற்றம் சுமத்தப்பட்டுள்ள இந்த நபர் படங்களில் வருவது போல பதினைந்து அடியாட்களையும், பொலிஸ் அதிகாரிகளையும் தனக்கு சாதகமாக வைத்துக்கொண்டு சுதந்திரமாக இவ்வாறான மோசடி செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்.
சட்ட ரீதியாக இவரை அணுகுவோம் எனக் கருதி நாம் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பொழுது “ஊழலற்ற நாட்டை உருவாக்குவோம்“ என்று கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தில் கீழ் பொறுப்பில் உள்ள சில பொலிஸ் அதிகாரிகளின் முறையற்ற செயற்பாடுகளின் காரணமாக சட்டம் அனைவருக்கும் சமமாக இல்லை என்று நாங்கள் சோர்ந்து போனோம்.
இந்த நபர் இந்தியாவில் பாணிப்பூரி விற்கும் நபரிடமிருந்து கூட ஐம்பது இலட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் நாம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்வதற்காக சென்றிருந்த பொழுது 10 இலட்சத்திற்கு மேலாக நிதி மோசடி செய்திருந்தால் மாத்திரம் உங்களுடைய முறைபாட்டினை ஏற்றுக் கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்தே பதுளை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளில் இருந்தும் நாம் இங்கு போராட்டத்திற்காக வருகைத்தந்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளனர்.
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam