கல்வி அமைச்சருடனான பேச்சு தோல்வி; தொடர்கின்றது ஆசிரியர்கள் போராட்டம்
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பிரீஸுக்கும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கல்வி அமைச்சில் இன்று நடைபெற்ற பேச்சு தீர்மானம் எதுவுமின்றி முடிவடைந்துள்ளது.
குறித்த கலந்துரையாடல் வெற்றியளிக்காத காரணத்தால் ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் தொடரும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கிக் கொண்டுள்ள நிலையில், அதனைத் தொடர்வதற்கு ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் கடந்த 12ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, தமது கோரிக்கைகளை வலியுறுத்தி நாட்டின் சில பகுதிகளில் ஆசிரியர் சங்கங்களால் இன்றும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 12 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan