கல்வி அமைச்சருடனான பேச்சு தோல்வி; தொடர்கின்றது ஆசிரியர்கள் போராட்டம்
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பிரீஸுக்கும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கல்வி அமைச்சில் இன்று நடைபெற்ற பேச்சு தீர்மானம் எதுவுமின்றி முடிவடைந்துள்ளது.
குறித்த கலந்துரையாடல் வெற்றியளிக்காத காரணத்தால் ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் தொடரும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கிக் கொண்டுள்ள நிலையில், அதனைத் தொடர்வதற்கு ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் கடந்த 12ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, தமது கோரிக்கைகளை வலியுறுத்தி நாட்டின் சில பகுதிகளில் ஆசிரியர் சங்கங்களால் இன்றும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri