கல்வி அமைச்சருடனான பேச்சு தோல்வி; தொடர்கின்றது ஆசிரியர்கள் போராட்டம்
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பிரீஸுக்கும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கல்வி அமைச்சில் இன்று நடைபெற்ற பேச்சு தீர்மானம் எதுவுமின்றி முடிவடைந்துள்ளது.
குறித்த கலந்துரையாடல் வெற்றியளிக்காத காரணத்தால் ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் தொடரும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கிக் கொண்டுள்ள நிலையில், அதனைத் தொடர்வதற்கு ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் கடந்த 12ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, தமது கோரிக்கைகளை வலியுறுத்தி நாட்டின் சில பகுதிகளில் ஆசிரியர் சங்கங்களால் இன்றும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam