2000 நாட்களை கடந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது போராட்டம்!
தமிழர்களின் கோரிக்கையை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யாமல் ஜெனிவா செல்வது, நோய்வாய்ப்பட்ட ஒருவரைப் புறக்கணித்து, அவரது இறுதிச் சடங்கிற்குச் செல்வதைப் போன்றது என வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கொட்டகையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை கண்டறியவும், தமிழ் இறையாண்மையை பெறவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிக்காக காத்திருக்கும் இந்த குடிசையில் எமது தொடர் போராட்டம் 2029 நாட்களை தொட்டுள்ளது.
மனித உரிமைகள் பேரவை
எதிர்வரும் திங்கட்கிழமை 12ஆம் திகதி, மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு ஆரம்பமாகும்.
நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் நெதர்லான்ட் ஆகிய நாடுகளுடன் தமிழர்கள் சார்பாக பிரச்சாரம் செய்யத் தவறிவிட்டனர்.
நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள்
அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது நெதர்லாந்துக்கு சென்றதில்லை.இவர்கள்
தமிழர்களுக்கான சேவையை செய்ய தவறவிட்டார்கள்.
தமிழர்களின் கோரிக்கையை முன்னிறுத்தி முன் பிரச்சாரம் செய்யாமல் ஜெனிவா செல்வது, நோய்வாய்ப்பட்ட ஒருவரைப் புறக்கணித்து, அவரது இறுதிச் சடங்கிற்குச் செல்வதைப் போன்றதாகும்.
போர் குற்றவாளிகள்
இலங்கையின் போர் குற்றவாளிகளுக்கு எதிரான பொருளாதார மற்றும் பயணத் தடைகள், சாட்சியங்கள் சேகரிக்கும் பொறிமுறையை விரிவுபடுத்துதல் போன்றவற்றைக் கோரும் மிஷேலின் அறிக்கையை இப்போது நாம் அறிவோம்.
இலங்கையை ஐசிசிக்கு அழைத்துச் செல்வது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தீர்மானிக்கப்படும்.
இவர்கள் சரியான நேரத்துக்காகக் காத்திருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரிந்த விடயம் என தெரிவித்துள்ளனர்.