இலங்கை சிறையில் இந்திய கடற்றொழிலாளர்கள்: இந்திய மக்களவைத் தேர்தலில் தாக்கம்
இலங்கை சிறையில் உள்ள 37 ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்யவில்லை எனில் இந்திய மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க போவதாக இந்திய கடற்றொழிலாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் 37 ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களால் தொடர் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, வரும் மக்களவைத் தேர்தலுக்குள் கைது செய்யப்பட்டுள்ள கடற்றொழிலாளர்கள் படகுடன் விடுதலை செய்யப்படாவிட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாக ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
கடலுக்கு செல்லாத விசைப்படகுகள்
மேலும், எதிர்வரும் 8ஆம் திகதி ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடற்றொழிலாளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டை உள்ளிட்டவற்றை ஒப்படைத்து போராட்டம் நடத்த உள்ளனர்.
அதேவேளை, வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக ராமேஸ்வரம் துறைமுகத்தில் சுமார் 800இற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan
