கொழும்பில் நிதியமைச்சுக்கு எதிராக வீதிக்கிறங்கிய பொதுமக்கள்
துறைசார்ந்த நிர்வாக அதிகாரிகளால் பதவி உயர்வு கோரி நிதியமைச்சுக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது, இன்று( 25.03.2024) கொழும்பு நிதியமைச்சு கட்டிடத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, நிர்வாக அதிகாரிகளின் பதவி உயர்வுக்கான அமைச்சரவை அனுமதி பத்திரத்திற்கு உடன் அங்கீகாரம் வழங்குமாறு அரச நிர்வாக அதிகாரிகளின் கூட்டுக் குழுவினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் அனுமதி
மேலும், " பதவி உயர்வுக்கான அமைச்சரவை அனுமதி பத்திரத்தை வழங்குங்கள், 18 மாதங்களாகியும் அனுமதி வழங்கப்படவில்லை. அதிகாரிகள் உறக்கத்தில்.” போன்ற பதாதைகள் ஏந்தியவாறு அதிசாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |