கொழும்பில் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு தீ வைப்பு
கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்குள் நுழைந்துள்ள போராட்டக்காரர்கள், இல்லத்திற்கு தீ வைத்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த பகுதிக்கு தீயணைப்பு படையினர் வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் இணைப்பு
கொழும்பு 7இல் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லம் அமைந்துள்ள பகுதியை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் படையெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து கண்ணீர்ப்புகை தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கடும் பதற்ற நிலை நீடித்து வருகிறது.
முதலாம் இணைப்பு
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்ல வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கை
கொழும்பு 7ல் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு எதிரே ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலக வேண்டும் என தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அப்பகுதியில் ஊடகவியலாளர்கள் மீதும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.




அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
