நாட்டில் மக்கள் புரட்சி வெடிக்கும் நிலைமை..! வீதிக்கு இறங்கப் போகும் பெருமளவு மக்கள்
மக்கள் புரட்சி வெடிக்கும் நிலைக்கு கொண்டு சென்று நாட்டில் இரத்தக் களரி ஏற்படுவதற்கு இடமளிக்காது, நெருக்கடி நிலைமைகளுக்கு காரணமான ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என முன்னாள் அமைச்சரான 43ஆம் படையின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தின் நடவடிக்கைகளால் முழு தேசமும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும், தற்போதைய நிர்வாகத்திற்கு எதிராக இன்று மாலை 4 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டம் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
பெருமளவிலான மக்களை வீதிக்கு அழைத்துச் செல்வதற்காக அனைத்து அரசாங்க எதிர்ப்பு செயற்பாட்டாளர்களுடனும் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகவும் அது இரண்டாம் கட்ட மக்கள் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam