யாழில் ரணிலிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்! என்ன கோபம் என்று கேள்வி எழுப்புகிறார் பிரதமர்
யாழ். சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது வீதியில் இறங்கியுள்ள மக்களுக்கு என்ன கோபம்? அவர் என்ன குற்றம் செய்தார்? என பிரதமர் தினேஷ் குணவர்த்தன கேள்வியெழுப்பியுள்ளார்.
யாழில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை வினவியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ''ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சாதாரண பிரஜை அல்ல. அவர் இலங்கை நாட்டின் தலைவர்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள்
தமிழ் மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்த ஒரு தலைவரே ரணில். அவரின் யாழ். விஜயத்தை அங்குள்ள ஒரு குழுவினர் எதிர்த்துள்ளனர்.
இதற்கமைய அவர்களைப் பின்னால் நின்று மற்றொரு குழுவினர் இயக்கியுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது அவர்களுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை.
ஜனாதிபதியின் யாழ். விஜயத்திற்கு எதிர்ப்பு
பொலிஸ் தடைகளைத் தகர்த்து ஆர்ப்பாட்டம் செய்தமையால் ஆபத்து நிலைமையை உணர்ந்து பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் செய்தனர்.
இது ஜனநாயக நாடு. வீதியில் இறங்கி எதிர்ப்புத் தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு.
ஆனால், தேவையற்ற ஆர்ப்பாட்டங்கள் எதற்கு? ஆர்ப்பாட்டங்களை நிறுத்திவிட்டு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

இப்படி தான் சமந்தாவின் வாழ்க்கை இருக்கும்..கச்சிதமாய் கணித்த Aaliiyah!என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா? Manithan
