நுவரெலியாவில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்(Photos)
நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், தொடர் மின் துண்டிப்பு, எரிபொருள் விலையேற்றம், டீசல் தட்டுப்பாட்டினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்செயலைக் கண்டித்து நுவரெலியா - இராகலை நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டமானது இன்று (24) தோட்ட தொழிலாளர்கள், இளைஞர், யுவதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி தோட்டங்களிலிருந்து தொழிலாளர்கள் பேரணியாக இராகலை நகரம் வந்து அங்கு அனைவரும் ஒன்றுகூடியே இப்போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
இதன்போது எதிர்ப்பு பதாதைகளை காட்சிப்படுத்தியவாறு, கருப்பு கொடிகளை ஏந்திக்கொண்டு
கோஷங்களை எழுப்பியவாறு போராட்டகாரர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.










