கோட்டாபயவை முக்கியமான இடத்தில் பாதுகாக்க தயாராகும் சக்திகள் - அரசியல் ஆய்வாளர் தகவல் (VIDEO)
யுத்த வெற்றி ஊடாக வெற்றி வீரனாக கொண்டாடப்பட்ட, மகாவம்சத்தில் தொடர்ச்சியாக எழுதப்பட்ட போர் வீரரான கோட்டாபய ராஜபக்சவை அந்நிய நாட்டில் கைது செய்து சிறையில் அடைக்க மகாசங்கத்தினர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள் என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் இந்திரன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்,கோட்டாபய ராஜபக்சவை முக்கியமான இடத்தில் வைத்து பாதுகாக்க மகா சங்கத்தினர் போன்ற பல சக்திகள் பாதுகாக்க தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவின் கொள்கையை பின்பற்றும் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் முகங்கள் மாறியுள்ளதே தவிர முகவரிகள் மாறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு துரத்தப்படுவதற்கு முன்னர் மகாசங்கத்தினரின் செயற்பாடுகள் முக்கியமாக காணப்படுகின்றது.
அதாவது பௌத்த சிங்கள மகா சங்கத்தினரின் ஆணையை ஒருபோதும் மீறமாட்டேன் என கோட்டாபய போன்று ரணில் விக்ரமசிங்கவும் மதிப்பதாக வாக்குறுதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam
