முகக்கவசம் அணியாத 30 பேருக்கு வழக்குத்தாக்கல் - பொலிஸார் அதிரடி நடவடிக்கை
வவுனியா நகரப்பகுதியில் முககவசம் அணியாமல் சென்ற 30 ற்கும் மேற்பட்டோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி றொசான் சந்திரசேகர தலைமையிலான குழுவினரால் குறித்த நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது நகரில் முககவசம் அணியாமல் சென்ற 30 ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர்.
குறித்த நபர்களிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத்
தெரிவித்த பொலிஸார், சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்காதவர்களிற்கு
எதிராகக் கடுமையான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.