பாடசாலை மாணவர்களை பாதுகாக்க சிறப்பு படை: முன்வைக்கப்பட்ட கோரிக்கை
போதைப்பொருள் வியாபாரிகளிடம் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்க தனியான பாதுகாப்பு படையொன்றை ஸ்தாபிக்க வேண்டியது அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தலினால் நாட்டின் சிறுவர்கள் மிகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், ஒன்லைன் பணப்பறிமாற்றம் போன்ற முறைகளின் மூலம் போதைப்பொருள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் பாடசாலை மாணவர்களை அடிமைப்படுத்தியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் குற்றம் சுமத்தியள்ளார்.
கடுமையான சட்ட அமைப்பு
இவ்வாறான முறைப்பாடுகளை நகர மற்றும் கிராம பாடசாலைகளுக்கு செல்லும் போது பெற்றோர்கள் தம்மிடம் கூறுவதாக எதிர்கட்சி தலைவர் கூறியுள்ளார்.
மேலும், பாடசாலை சமூகத்திலிருந்து போதைப்பொருளை அகற்றுவதற்கான அவசர வேலைத்திட்டம் ஒன்று தேவைப்படுவதாகவும், சிறுவர்களை மையமாகக் கொண்ட போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான கடுமையான சட்ட அமைப்பு மற்றும் வேலைத்திட்டம் தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
