அநுர அரசில் தொடரும் அதிரடி! பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்
டுபாய் அசித எனப்படும் நபரின் 4 கோடி ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன.
போதைப்பொருள் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும், சொத்துக்களே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணையில் இவை மீட்கப்பட்டுள்ளது.
சொத்துக்கள் பறிமுதல்
அதற்மைய, பாணந்துறைப் பகுதியிலுள்ள பல நிறைவு செய்யப்படாத கட்டிடங்களும் காணிகளும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில், மத்துபிட்டிய பகுதியில் கட்டுமானத்தில் உள்ள இரண்டு மாடி வீடு, சிந்தாவத்த பகுதியில் வீடு உள்ள காணி மற்றும் அலுபொம்மை மேற்கு பகுதியில் உள்ள காணி ஆகியவை அடங்கும்.