வடக்கில் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் நடமாடும் சேவையை முன்னெடுக்க தீர்மானம்
வடமாகாண நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் பொதுமக்களுக்காக நடமாடும் சேவை ஒன்று நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண பிரதி பணிப்பாளர் கவிதா ஜூவகன் தெரிவித்துள்ளார்.
இந்த பொதுமக்கள் நடமாடும் சேவையானது காலை 8:30 மணி தொடக்கம் பிற்பகல் 2:30 மணி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடபகுதியில் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குரிய தீர்வினை பெற்று கொடுப்பதற்காக பொதுமக்களுக்கு நடமாடும் சேவையினை இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் தீர்மானங்கள்
முதல் கட்டமாக எதிர்வரும் 9ம் திகதி நகர விருத்தி அதிகார சபையின் வடமாகாண காரியாலயத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கியதாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் இரண்டாம் கட்டமாக வவுனியா கலாச்சாரம் மண்டபத்தில் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த அபிவிருத்தி திட்டமிடல் அனுமதி தொடர்பாக துறை சார்ந்த திணைக்களங்களின் தலைவர்களின் பங்கு பற்றுதலோடு இந்த பொதுமக்கள் நடமாடும் சேவையானது நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த நடமாடும் சேவையில் பயன் பெற
விரும்பும் பொதுமக்கள் குறித்த நடமாடும் சேவையில் பங்கு பற்ற முடியும் எனவும்
தெரிவித்துள்ளார்.